• சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு
தற்கால நவீன மருத்துவம் செலவுமிக்கதாக இருக்கிறது. இதற்கு இன்ஷூரன்ஸ் வேறு செய்து கொள்ள வேண்டும். சம்பாத்தியம் முழுவதும் மருத்துவத்துக்கே சென்றுவிடுமோ என்று மருட்சியாக இருக்கிறது. ஆனால், இயற்கை, உணவிலேயே மருந்தைக் கொடுத்திருக்கிறது. மண்ணுக்குப் போகும் உடலைக் காக்க மண்ணிலிருந்து வரும் இயற்கை உணவும் மூலிகையுமே உதவுகின்றன. இந்த விந்தையை ஆற்றுகிறது இயற்கை. இந்த ரகசியத்தை சித்த மருத்துவம் நன்கு உணர்ந்திருக்கிறது. சித்த மருத்துவம் எளிதில் கிடைக்கும் மூலிகைப் பொருட்களையே உபயோகிக்கிறது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்களான எலுமிச்சம்பழம், அன்னாசிப் பழம் போன்ற எளிய உணவுப் பொருட்களே மருந்தாகின்றன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், ஆஸ்துமா, படர் தாமரை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், உதிரப்போக்கு, அல்சர், மஞ்சள் காமாலை, ஆண்மைப் பிரச்னை, மூச்சுத் திணறல்... போன்ற அனேக வியாதிகளுக்கு எளிய சித்த மருத்துவ முறைகளை இந்த நூலில் விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர் சுஜாதா ஜோசப். உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மூலிகைகளைத் தவிர மூலிகைகளைக் கொண்டு உடலில் பற்றுப் போடுதல், தோலின் மேலே களிம்புபோல வைத்துக் கட்டுதல் ஆகியவற்றையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர். சுவையைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டால் எளிய உணவுப் பொருட்களிலிருந்து ஆரோக்கியத்தை எளிதாகவும் செலவில்லாமலும் பெறலாம். மேலும், சித்த மருந்துப் பொருட்களைச் சுவைத்தும் சாப்பிடலாம். டாக்டர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு

  • ₹120
  • ₹102


Tags: siththa, maruthuvam, sirapaana, theervu, சித்த, மருத்துவம், சிறப்பான, தீர்வு, டாக்டர் எஸ். சுஜாதா ஜோசப், விகடன், பிரசுரம்